May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 26,533 பேருக்கு கொரோனா; 48 பேர் சாவு

1 min read

Corona for 26,533 people in Tamil Nadu today; 48 dead

28.1.2022
தமிழகத்தில் இன்று 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 48 பேர் உயிரிழந்துள்ளனர். 28,156 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 26,533 ஆக சற்று குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,45,376 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 26,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,79,284 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 15,579 பேர் ஆண்கள், 10,954 பேர் பெண்கள். இன்று 28,156 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,29,961 ஆக உயர்ந்துள்ளது.

48 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 48 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,460 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,591 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 28 ம் தேதி) 5,246 ஆக சற்று குறைந்துள்ளது.

கோவையில் 3448 பேருக்கும், செங்கல்பட்டியில் 1662 பேருக்கம், ஈரோட்டில் 1261 பேருக்கும், சேலத்தில் 1387 பேருக்கும், திருப்பூரில் 1779 பேருக்கும், நெல்லையில் 443 பேருக்கும், தென்காசியில் 120 பேருக்கும், தூத்துக்குடியில்269 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.