May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 24,418 பேருக்கு கொரோனா; 4 பேர் சாவு

1 min read

Corona for 24,418 people in Tamil Nadu today; 4 deaths

29.1.2022
தமிழகத்தில் கொரோனா தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று புதிதாக 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் புத்தாண்டிற்குப் பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த 22-ம் தேதி 30 ஆயிரத்தை தாண்டி 30,744 ஆக பதிவானது. அதன்பின் குறைய ஆரம்பித்துள்ளது.

நேற்று 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 24,418 ஆக பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதிகரித்துள்ளது.

46 பேர் சாவு

இன்று 46 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தின் மொத்த உயிரிழப்பு 37 ஆயிரத்து 506-ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.