டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு
1 min readNew syllabus release for DNPSC exams
29.1.2022
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தான் நடத்த இருக்கும் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிட்டுள்ளது இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி செயலாளர் பி. உமா மகேஸ்வர் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி குருப்-2, குருப்-2-ஏ முதல்நிலைத் தேர்வு மற்றும் குருப்-4, குருப்-3, குருப்-7-பி, குருப்-8 மற்றும் சிறை அலுவலர் தேர்வு, உதவி சிறை அலுவலர் தேர்வு ஆகியவற்றுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான (கொள்குறிவகை) மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வாணயத்தின் இணையதளத்திற்கு சென்று புதிய பாடத்திட்டத்தை தெரிந்துகொள்ளலாம்.
குருப்-2 மற்றும் குருப்-2-ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரியிலும் மார்ச் மாதத்திலும் . குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும்.