May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 14,013 பேருக்கு கொரோனா;37 பேர் சாவு

1 min read

Corona for 14,013 people in Tamil Nadu today; 37 deaths

2.2.2022
தமிழகத்தில் மேலும் கொரோனா பாதிப்பு குறைந்தது. இன்று ஒரே நாளில் புதிதாக 14,013 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 ஆயிரத்து 013 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,054 பேரும், கோவையில் 1,696 பேரும், செங்கல்பட்டில் 1,198 பேரும், திருப்பூரில் 1,159 பேரும், ஈரோட்டில் 813 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 20 லட்சத்து 16 ஆயிரத்து 582 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 33 லட்சத்து 75 ஆயிரத்து 329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

37 பேர் சாவு

தமிழகத்தில் 37 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 636 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

இத்தொற்று பாதிப்பில் இருந்து இன்று 24 ஆயிரத்து 576 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 31 லட்சத்து 59 ஆயிரத்து 694 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.