May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 1,259 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,259 newcomers in India

29/3/2022
இந்தியாவில் புதிதாக 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் பாதிப்பு 1,270 ஆக இருந்த நிலையில் புதிய பாதிப்பு மேலும் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 21 ஆயிரத்து 982 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 35 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 25 பேர் அடங்குவர். இதுதவிர அரியானாவில் 4 பேர், மிசோரத்தில் 3 பேர், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒருவரும் அடங்குவர்.

நாட்டில் தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,21,070 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றின் பிடியில் இருந்து மேலும் 1,705 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 85 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 15,378 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 481 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 183 கோடியே 53 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 25,92,407 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 5,77,559 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.79 கோடியாக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.