May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

1 min read

2 terrorists shot dead in Kashmir

31.5.2022
காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் அவந்திபுரா மாவட்டம் ராஜ்புரா பகுதியில் பங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசார், பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். கடந்த 2 நாட்களாக நடந்த சண்டை இன்று காலை வரை நீடித்தது.

இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட ஷகித் ராதர் மற்றும் உமர் யூசப் ஆகிய 2 பயங்கரவாதிகளிடமிருந்தும் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.