June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

பள்ளிகளுக்கான நேரத்தை நிர்வாகமே தீர்மானிக்கலாம்-
பள்ளிக்கல்வித்துறை தகவல்

1 min read

Time for schools can be decided by the administration-School Education Information

11.6.2022
பள்ளிகளுக்கான நேரத்தை நிர்வாகமே தீர்மானிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கூடம் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என்றும், பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருதி பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும், 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *