May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஜெர்மனியில் ‘வந்தே மாதரம்’ கோஷத்துடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

1 min read

An enthusiastic welcome to Prime Minister Modi with the slogan ‘Vande Mataram’ in Germany

26.6.2022
ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு “வந்தே மாதரம்” கோஷத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெர்மனியில் மோடி

ஜெர்மனி நாட்டில், ஸ்குலோஸ் எல்மாவ் என்ற இடத்தில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘ஜி-7’ அமைப்பின் உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் நேரில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைத்துள்ளார்.

இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்று ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு ஜெர்மனிக்கு புறப்பட்டார்.
இன்று காலை பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார்.

வரவேற்பு

ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றஅவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி ஜெர்மனி முனிச் நகரில் தான் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றபோது அவருக்கு இந்தியர்கள் “வந்தே மாதரம்” என்ற கோஷத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் குழந்தைகளுடன் அவர் உரையாடினார். குழந்தைகள் அவரிடம் ‘ஆட்டோகிராப்’பெற்று கொண்டனர்.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.நாளையும் கலந்துகொள்கிறார்.

இந்த மாநாட்டின் இடையே அவர் 12 நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளார். உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு அவர் நாளைமறுநாள் (28-ந்தேதி) ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.


About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.