தமிழகத்தில் இன்று 1,472 பேருக்கு கொரோனா
1 min readCorona for 1,472 people in Tamil Nadu today
26.7.2022
தமிழகத்தில் நேற்று 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 1,472-அக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. அந்த வகையில் இன்றைய பாதிப்பு 1,500ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் இன்று மேலும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 691 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தொற்று பரவலைக் கண்டறிய இன்று 25,821- மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மேலும் 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.