சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் 3 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்
1 min read
President’s medal to 3 Tamil Nadu police officers on the occasion of Independence Day
14.8.2022
தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதக்கம்
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவது தலைசிறந்த சேவைக்கான போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல ஜனாதிபதி பதக்க பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது . அதில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏடிஜிபி சங்கர் ,உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி ,சேலம் துணை ஆணையர் மாடசாமி ஆகியோருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.