April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 494 பேருக்கு கொரோனா

1 min read

Today 494 people have corona in Tamil Nadu

31.8.2022
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 494 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 30) 494 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,68,166 ஆக அதிகரித்துள்ளது. இன்று 537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,24,970 ஆக உயர்ந்து உள்ளது.
இன்று ( ஆக.,30) கோவிட் பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 38,035 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு குறைவாக காணப்பட்டது. நேற்று (ஆக.,29ம் தேதி ) 77ஆக இருந்த நிலையில் இன்று (ஆக., 30 ம் தேதி) சென்னையில் 75 ஆக குறைந்து உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,161 ஆக உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.