May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை

1 min read

Frustrated with failure in NEET, student hangs herself

8.9.2022
ஆவடி அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சோழபுரம் இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 47) இவர் ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராஜேந்திரன். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமுதாவை பிரிந்து சென்று ராஜேந்திரன் திருவண்ணாமலையில் தனியாக வசித்து வருகிறார்.
இவர்களது மகள் லக்சனா ஸ்வேதா (வயது 19) அமுதா மற்றும் அவரது மகள் லக்சனா ஸவேதா இருவர் மட்டும் திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வருகின்றனர்.
லக்சனா ஸ்வேதா அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்துள்ளார். தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் பி.எஸ்., என்ற ஒன்றரை ஆண்டுகள் படிப்பை ஆன்லைன் வழியாக படித்து வந்தார். இந்நிலையில் எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்ற நினைவோடு இருந்த அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை லக்சனா ஸ்வேதா எழுதினார்.
அப்பொழுது அவரது தாயார் அமுதாவிடம் நான் தேர்வை சரியாக எழுதவில்லை மார்க் குறைவாக தான் வரும் போல் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதற்கு அமுதா சரியாக எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை அடுத்து எழுதிக் கொள்ளலாம் என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று இரவு நீட் தேர்வுக்கான ரிசல்ட் வெளிவந்தது. ரிசல்ட் என்னவாக இருக்குமோ என்று பரபரப்புடன் ரக்சனா ஸ்வேதா அவரது தாயாருடன் வீட்டில் அமர்ந்து கணிணியில் ரிசல்ட் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தற்கொலை

மாலையில் இருந்து ரிசல்ட் வரும் என்று இருவரும் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் இரவு 11:30 மணிக்கு அமுதா தூங்குவதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு 1.30 மணி அளவில் நீட் தேர்வு ரிசல்ட் வெளிவந்த பிறகு அதை பார்த்த லக்சனா ஸ்வேதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீட் தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் மிகுந்த மன விரக்தியடைந்த லக்சனா ஸ்வேதா வீட்டின் ஹாலில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 11:30 மணிக்கு தூங்கச் சென்ற அமுதா அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் மாணவியை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயில் போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியடைந்த மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.