May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

ஊட்டியில் பெண் காவலரை திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

1 min read

Sub-inspector arrested in Ooty for cheating woman constable by pretending to marry her

8.9.2022
ஊட்டி அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண் காவலரை ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சப்-இன்ஸ்பெக்டர்

, நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் சரவணன்(வயது 50). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இதே காவல் நிலையத்தில் விவாகரத்து பெற்ற பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அப்பர் குன்னூர் காவல் நிலைய போலீசார், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை கைது செய்தனர். இவரிடம் விசாரணை நடத்தி போலீசார், தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.