திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் 4 பெண்கள் பலி
1 min read4 women killed in car accident on Trichy National Highway
26.10.2022
திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
விபத்து
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரின் டயர் வெடித்தது. இதில் கார் வேகமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார்கள் மீது மோதியது. இதில் கார்களில் வந்த 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த 2 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.