இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா
1 min read1,112 new corona cases in India
27.10.2022
இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 46 ஆயிரத்து 880- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,892- ஆக உள்ளது.
அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 821 ஆக உள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 14 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,28,987 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 219.57 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.