May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

வகுப்பறையில் ஆசிரியையை ஆபாசமாக பேசிய பள்ளி மாணவர்கள் கைது

1 min read

School students arrested for speaking obscenely to the teacher in the classroom

வகுப்பறையில் ஆசிரியையை தொடர்ந்து ஆபாசமாக பேசிய 4 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியை

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ரத்ன இனியத்பூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஷகுப்தா பர்வீன் (வயது 27). இவர் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இதனிடையே, ஆசிரியை ஷகுப்தா பர்வீனை அவர் பயிற்றுவிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் ஆபாசமாக பேசி கேலி செய்து வந்துள்ளனர்.
இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்திலும் பதிவேற்றுள்ளனர். இதன் உச்சமாக கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ஆசிரியை ஷகுப்தா பர்வீன் வகுப்பறையில் இருந்தபோது அவரிடம் ‘ ஐ லவ் யூ’ என்று சில மாணவர்கள் கூறியுள்ளனர். மேலும், வகுப்பறைக்கு வெளியே ஆசிரியை நடந்து சென்றபோது அவரை ஆபாசமாகவும் பேசியுள்ளனர்.

கைது

இந்த 2 நிகழ்வுகளையும் வீடியோ எடுத்த மாணவர்கள் அதை சமூகவலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது வைரலானது. இதையடுத்து, மிகுந்த மன உளைச்சலடைந்த ஆசிரியை ஷகுப்தா பர்வீன் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நேற்று போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வகுப்பறையில் ஆசிரியையை ஆபாசமாக பேசிய ஆசிப், அமென், அதஷ், ஷகுபா (மாணவி) ஆகிய 4 பேரையும் இன்று கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.