மரணம் அடைந்த தாயாரின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்
1 min readPrime Minister Modi set fire to his dead mother’s remains
30.12.2022
பிரதமர் மோடியின் தாயார் மரணம் அடைந்தார். தாயார் சிதைக்கு மோடி தீ மூட்டினார்.
மோடி தாயார்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் கடந்த புதன் கிழமை சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அங்கு விரைந்து வந்து தாயாரைப் பார்த்துச் சென்றார். அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தார். ஹீராபென் மோடியின் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மரணம்
இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.
தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்றார். அங்கு தாயாரின் உடல் இருந்த மருத்துவமனைக்கு சென்றார். பிரதமர் மோடி, தனது தாயாரின் உடலை மருத்துவமனையில் இருந்து சுமந்து சென்றார். அகமதாபாத்தில் உள்ள தனது சகோதரரான பங்கஜ் மோடியின் வீட்டில் அவரது தாயாரின் பூத உடல் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
தீ மூட்டினார்
பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது.
இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். மிகவும் இறுக்கமான முகத்துடன் சோகத்தை வெளிப்படுத்திய படி பிரதமர் மோடி காணப்பட்டார்.
6 பிள்ளைகள்
ஹீராபென் மோடி குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள வாட்நகரில் ஜூன் 18, 1923 இல் பிறந்தார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர், ஆறு குழந்தைகளில் பிரதமர் மோடி மூன்றாவது குழந்தை. அவர் பிரதமரின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகர் அருகே உள்ள ரேசன் கிராமத்தில் வசித்து வந்தார்.