1083 காலி பணியிடங்களுக்கான தேர்வு- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
1 min readExam for 1083 Vacancies- TNPSC Notification
3.2.2023
1083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர், உள்ளிட்ட 1083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், 04.03.2023 தேதி இந்த தேர்வுகளுக்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், இணைய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவை காலை மதியம் விதம் 27.05.2023ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.