May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

1 min read

2 people arrested in Tenkasi district under Anti-Hooliganism Act

4.2.2023
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் கொலை கொள்ளை போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தென்காசி எஸ்பி சாம்சன் பரிந்துரையின் படி, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் உத்தரவுபடி 2 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாலை மத்திய சிறையில் அடைத்தனர்

குண்டர் தடுப்பு சட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தொடர்புடைய கோபிநாத் (வயது 23) மற்றும் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய செல்வக்குமார் (வயது 24) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை வாசுதேவநல்லூர் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.
One attachment
• Scanned by Gmail

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.