அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக எம்.எல்.ஏ பழனி நாடார் தேர்வு
1 min readMLA Palani Nadar elected as member of All India Congress Committee
22.2.2023
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சுரண்டை காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக, தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன் கார்கே அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சுரண்டை நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயபால் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ் பழனி நாடார் எம்எல்ஏவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் சாந்தி தேவேந்திரன், அமுதா சந்திரன், பாலசுப்பிரமணியன், பிரபு, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலடி சங்கரையா, பால் என்ற சண்முகவேல் ,தெய்வேந்திரன், பிரபு, சுந்தரராஜ், நாட்டாமை ராமராஜ், சமுத்திரம், சிங்கராஜ் , சௌந்தர், வைரமுத்து, கஸ்பா செல்வம் என்ற அருணாசலம், டயர் செல்வம், சந்திரன், மகேஷ், கந்தையா, கணேசன் பொன்ராஜ், தர்மராஜ், ஆதிநாராயணன், பிரபாகர், அரவிந்த் சாம்பவர் வடகரை நகர காங்கிரஸ் தலைவர் பழனிக்குமார், தாயார் தோப்பு ராமர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ் பழனி நாடார் எம்எல்ஏ நன்றி கூறினார்.