அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு தற்கொலை செய்த ‘அனிதா’ பெயர்
1 min read
The name of ‘Anita’ who committed suicide in Ariyalur Government Medical College Hall
14.3.2023
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு நீட் பிரச்சினையில் தற்கொலை செய்த ‘அனிதா’ பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அனிதா
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக அரியலூர் மாணவி அனிதா 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ பெயர் வைக்கப்பட்டுள்ளது. 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு ‘அனிதா’ பெயர் சூட்டி முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனிதா நினைவு அரங்கம் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.