பல் பிடுங்கிய விவகாரம்: 2 போலீசார் பணியிட மாற்றம்
1 min read
Toothless issue: 2 policemen transferred
2.4.2023
பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 2 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பல் பிடுங்கிய விவகாரம்
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.