குமரி மாவட்டத்தில் 11-ந் தேதி தமிழ்க்கனவு நிகழ்ச்சி
1 min readTamil dream program on 11th in Kumari district
9.4.2023
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டாம் கட்டமாக மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி வருகின்ற 11.04.2023 அன்று நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியானது கடந்த 9.3.2023 அன்று நாகர்கோவில் ஹோலிகிராஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் வெகுவிமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நமது மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மாபெரும் தமிழ்க்கனவு
நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 11-அன்று களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்கக் கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது.
மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியின் நோக்கம் நமது மரபின் வளமையையும்,
பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான
வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதற்காகத் தமிழ் இணையக் கல்விக் கழகம் இந்நிகழ்ச்சியியை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் புத்தகக் கண்காட்சி, நான் முதல்வன் திட்டம், வேலை வாய்ப்பு அலுவலகம், உயர் கல்வி
வழிகாட்டுதல், வங்கிக் கடன், மாவட்டத் தொழில் மையம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஆகிய அரங்குகள் மாணவர்களுக்குப் பயன்படும் நோக்கில் அமைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியில், பிரபலமான ஊடகவியலாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்டோர் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடவுள்ளார்கள்.
அனைவரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ஜான் டேவிஸ், நாகர்கோவில்