பஞ்சாபில் இன்று தொழிற்சாலையில் கியாஸ் கசிந்து 9 பேர் பலி
1 min read9 people died in a gas leak in a factory in Punjab today
30/4/2023
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீர் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதில் 9 தொழிலாளர்கள் இறந்தனர்.
கியாஸ் கசிவு
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை 7.15 மணிக்கு திடீர் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதில் 9 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் சிக்கிக் கொண்டனர். இது பற்றி அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மயக்கமடைந்த 9 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் இறந்து விட்டனர்.
தேசிய மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தொழிற்சாலையில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்புபணிகள் முழுமையாக முடிந்தால் தான் எத்தனை பேர் தொழிற்சாலைக்குள் இருந்தார்கள் என்பது தெரியவரும். சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. கியாஸ் கசிந்ததால் தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதி முழுவதும் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.