May 23, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை -செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

1 min read

Timing of trains running between Nellai – Sengottai

5/5/2023
திருநெல்வேலி – செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில்களின் நேரம் 7ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே முதன்மை செய்தி தொடர்பு அதிகாரி குகநேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

பாலக்காடு

நெல்லை -பாலக்காடு நெல்லை -பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை சந்திப்பில் இருந்து இரவு வழக்கம் போல் 11.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சேரன்மாதேவிக்கு 11.44-க்கு வந்து 11.55 மணிக்கும், அம்பைக்கு 11.55 மணிக்கு வந்து 11.56-க்கும், கீழக்கடையத்துக்கு 12.08 மணிக்கு வந்து 12.09 மணிக்கும் புறப்படுகிறது.
தென்காசி, செங்கோட்டைக்கு வழக்கமான நேரத்துக்கு வந்து செல்லும். மறுமார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டைக்கு அதிகாலை 2.55 மணிக்கு பதிலாக 2.40 மணிக்கு வந்து 2.45 மணிக்கு புறப்படுகிறது. இதேபோல் பாவூர்சத்திரத்துக்கு 3.05 மணிக்கும், அம்பைக்கு 3.25 மணிக்கும், சேரன்மாதேவிக்கு 3.38 மணிக்கும் வந்து நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக 4.40 மணிக்கு வந்து சேருகிறது.

நெல்லை

காலை 7 மணிக்கு புறப்படும் நெல்லை -செங்கோட்டை பாசஞ்சர் சிறப்பு ரயில் வழக்கம் போல் புறப்பட்டு, 10 நிமிடங்கள் முன்னதாக 9.05 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது.
நெல்லையில் காலை 9.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயில் இனிமேல் காலை 9.45 மணிக்கு புறப்பட உள்ளது. இந்த ரயில் செங்கோட்டைக்கு 11.50 மணிக்கு சென்றடைகிறது. மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரயில், வழக்கமான நேரத்தில் புறப்பட்டு 5 நிமிடங்கள் முன்னதாக மாலை 4.10 மணிக்கு செங்கோட்டைக்கு செல்கிறது.

மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் வழக்கம் போல் புறப்பட்டு 15 நிமிடங்கள் முன்னதாக அதாவது இரவு 8.20 மணிக்கு செங்கோட்டைக்கு செல்கிறது. இதையொட்டி வழியில் உள்ள ரயில் நிலையங்களிலும் இந்த ரயில்கள் வந்து – செல்லும் நேரம் மாறுகிறது.
செங்கோட்டை – நெல்லை செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் ரயில் நெல்லை சந்திப்புக்கு வழக்கம் போல் காலை 8.50 மணிக்கு வருகிறது. ஆனால் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ஒருசில நிமிடங்கள் முன்னதாக வந்து, புறப்படுகிறது.
செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்படும் ரயில் 10 நிமிடங்கள் முன்னதாக நெல்லை சந்திப்புக்கு மதியம் 12.15 மணிக்கு வருகிறது. இதே போல் பிற்பகல் 2.55 மணி புறப்படும் ரயில் நெல்லைக்கு 20 நிமிடங்கள் முன்னதாக அதாவது மாலை 5 மணிக்கு வந்து சேருகிறது. மாலை 5.50 மணி ரயில் வழக்கம் போல் புறப்பட்டு 5 நிமிடங்கள முன்னதாக நெல்லையை இரவு 8.05 மணிக்கு வந்தடைகிறது.

இதையொட்டி வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ரெயில்கள் வழக்கத்தை விட சில நிமிடங்கள் முன்னதாக வந்து செல்கிறது.

மதுரை

செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு மதியம் 11.50 மணிக்கு புறப்படும் ரயில், இனிமேல் 12.10 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.40 மணிக்கு மதுரைக்கு செல்கிறது. செங்கோட்டை -கொல்லம் ரயில் பகல் 11.35 மணிக்கு பதிலாக, 12.35 மணிக்கு புறப்பட உள்ளது. இந்த ரயில் மாலை 4.35 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.