கடையத்தில் 9-ந் தேதி நடக்கும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கனிமொழி பங்கேற்பு
1 min readKanimozhi will participate in the Karunanidhi Centenary celebrations on the 9th
30.5.2023
தென்காசி தெற்கு மாவட்டம்
கடையத்தில் 9 ம் தேதி நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.க.கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தெரிவித்துள்ளார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்டம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடையத்தில் வருகிற 9 ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான மு.க. கனிமொழி எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சுமார் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்நிலையில் நேற்று விழா நடைபெறும் சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள இடத்தினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி கடையம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.க.கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, கூட்டத்தில் 3 ஆயிரம் பேருக்கு அயர்ன்பாக்ஸ், தையல் இயந்திரம், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, மகளிர்க்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க உள்ளார் என்றார்.
அதனைத் தொடர்ந்து மேடை அமைப்பதற்காக அளவீடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மற்றும் திமுக நிர்வாகிகள் சசிகுமார், சுரேஷ், மோகன்,மணிகண்டன்,அண்ணா
துரை, அர்ஜுனன், கோபி, கமல் முருகன், அழகிய நம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.