April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

மேலகரத்தில் திமுக ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

1 min read

Street meeting to explain DMK’s two-year achievement in Melakaram

30.5.2023
தென்காசி மாவட்டம், மேலகரத்தில் திமுக இளைஞரணி சார்பில் மேலகரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம் தலைமை வகித்தார். மேலகரம் பேரூர் கழக செயலாளர் இ.சுடலை, பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன், துணைத் தலைவர் அ.ஜீவானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணராஜா வரவேற்புரை ஆற்றினார். தலைமை கழக பேச்சாளர்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், செங்கை குத்தாலிங்கம், வழக்கறிஞர் வேலுச்சாமி, ஆயிரப்பேரி முத்துவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மேலகரம் பேரூர் திமுக கவுன்சிலர்கள் பூமா, சம்முகுட்டி, தங்கம்மாள், சுப்பிரமணியன், செல்வமணி, சிங்கத்துரை, நாகராஜ் சரவணார், பேரூர் நிர்வாகிகள் சலீம், கந்தசாமி, ரமேஷ் குமார், வேலுச்சாமி, கிட்டுபாண்டியன் என்ற கிருஷ்ணன், சண்முகம், சுந்தரம், ஈனமுத்துப் பாண்டியன், வீரபாண்டியன், யாகவா சுந்தர், பாலசுப்பிரமணியன், கல்யாணிசுந்தரம், வேலு, வார்டு செயலாளர்கள் காசி விஸ்வநாதன், சுப்பிரமணியன், திருமலை நாதன், கணேசன், பகவதி ராஜ், ஆறுமுகம், வீரபாண்டியன், பூபதி, குத்தாலிங்கம், பாலசுப்பிர மணியன், குருசாமி, ஈஸ்வரன், மற்றும் நன்னை சுந்தர், சந்திரன், திருமலை, முருகன், பகவதி ராஜ், மணி, ஆவின் முருகன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டனர். முடிவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கபிலன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.