April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- குற்றால சீசன் ஆரம்பமாகிறது

1 min read

Heavy rain warning for next 5 days in Kerala – Courtala season begins

10.5.2023
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையும் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் குற்றாலத்தில் சீசன் ஆரம்பமாக உள்ளது.

பருவமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மீண்டும் தீவிரம் அடைந்து வடகிழக்கு திசையிலும், அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாகவும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குற்றால சீசன்

கேரளாவில் பருவ மழை பெய்தால் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும். தற்போது குற்றாலம் மற்றும் தென்காசி பகுதியில் காற்று வீச தொடங்கிவிட்டது. ஐந்தருவியில் 4 பிரிவில் நேற்று தண்ணீர் விழுந்தது. கேரளாவில் மழை பெய்தால் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். அந்த வகையில் விரையில் குற்றாலத்தில் சீசன் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.