April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கோவிந்தப்பேரி ஊராட்சியில் 17.48 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை-டி.கே.பாண்டியன் திறந்து வைத்தார்

1 min read

TK Pandian inaugurated the cement road in Govindapperi panchayat at a cost of 17.48 lakhs.

10.11.2023
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரியில் ரூபாய் 17.48 லட்சம் செலவில் போடப்பட்டுள்ள புதிய சிமெண்ட் சாலையை கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத்தலைவர் டி. கே. பாண்டியன் திறந்து வைத்தார

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தப்பேரி ஊராட்சி கோவிந்தப்பேரி நடுத்தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 17.48 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிமெண்ட் சாலை திறப்புவிழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கோவிந்தப் பேரி ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார்.
கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் எஸ்.இசேந்திரன் முன்னிலை வகித்தார். கோவிந்தப்பேரி ஊராட்சி செயலாளர் பா.மூக்காண்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவரும், தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கோவிந்தப்பேரி டி.கே.பாண்டியன்
புதிய சிமெண்ட் சாலையை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவிந்தப்பேரி ஊராட்சி 2 வது வார்டு உறுப்பினர் இளவரசி பார்த்திப கண்ணன், 3 – வது வார்டு உறுப்பினர் பொன்னுத்தாய் முருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோகப் பாண்டியன், மாணிக்கம், மக்கள் நலப்பணியாளர் கிருஷ்ணன், மாரித்துரை, குமார், தங்கசாமி பாண்டியன், வெள்ளத்துரை பாண்டியன், சுப்பையா பாண்டியன், தங்கத்தேவர், என்.எஸ். மணியன், காளிமுத்து, கணேசன், முப்புடாதி, சுப்ரி, சாமுவேல் அந்தோணி மரிய அன்னம்மாள், செல்வி தேன்மொழி, இசக்கியம்மாள், மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தூய்மை காவலர்கள் ராமலட்சுமி, சத்யா, சாமியடியாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்த பேரி ஊராட்சி செயலாளர். பா.மூக்காண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.