தென்காசியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு-கல்லூரி தாளாளர் கைது
1 min readCollege rector arrested for sexual harassment of student in Tenkasi
10.6.2023
தென்காசியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தனியார் கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் புகார்
தென்காசி மாவட்டம், தென்காசி ஆசாத்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாஸ் பாரா மெடிக்கல் கல்லூரி செயல் பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் சூழலில் இந்த கல்லூரியில் பயின்று வரும் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்து நேற்று குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை
அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் “நான் தென்காசி ஆசாத்நகர் பகுதியில் உள்ள மாஸ் பாரா மெடிக்கல் கல்லூரியில்
டிப்ளமோ ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் என்ற
பிரிவில் 2 ம் ஆண்டு படித்து வருவதாகவும் அந்த கல்லூரியின் தாளாளர் முகமது அன்சாரி (வயது 45) என்பவர் தனக்கும் தன்னுடன் பயின்று வரும் சக மாணவிகளுக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வழங்கி வருவதாகவும் தன்னை தனியாக அழைத்து ஆபாசமாக பேசினார்” என்று புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்ப டையில், குற்றாலம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
தென்காசி மாஸ் பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளரான முகம்மது அன்சாரி அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவி களிடம் ஆபாசமான முறையில் பாலியல் உணர்வை தூண்டும் வகை யில் தொடர்ந்து பேசியதும், தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு பயின்று வரும் கிராமத்து மாணவிகள், தான் எப்படியாவது படித்து
விட்டு வெளியே சென்றால் போதும் என நடந்ததை எல்லாம் வெளியே கூறாமல் மறைத்துள்ளனர்.
கைது
இந்த நிலையில், எல்லை மீறி போன தொந்தரவின் காரணமாக ஒரு மாணவி தற்போது அளித்துள்ள இந்த புகாரினால் அந்த தனியார் கல்லூரியில் நடைபெற்று வந்த பாலியல் ரீதியான தொந்தரவுகள் தற்போது வெளியே வந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த கல்லூரியின் தாளாளரான முகமது அன்சாரி வாரம்தோறும் திங்கட்கிழமை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு அதிகாரிகள் மற்றும் அங்கு வருபவர்களு க்கு வருகை பதிவேடு மற்றும் சானிடைசர் வழங்குதல் உள் ளிட்ட பணிகளை செய்ய மாணவிகளை தனியாக அழைத்து இது போன்ற பாலியல் உணர்வுகளை தூண்டும் வார்த்தைகளை பேசி பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், இது பற்றி கல்லூரி மாணவிகள் வீட்டிலோ வேறு சக மாணவிகளிடமோ கூறினால் உனது மதிப்பெண்ணில் கை வைத்து விடுவேன். எனவும், எப்படி நீ சான்றிதழ் வாங்குகிறாய் எனவும் கூறி மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி வழக்குப் பதிவு செய்து தென்காசி பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர் முகமது அன்சாரியை போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.