ரவணசமுத்திரம் பாரதியார் சமுதாய கல்லூரியில் யோகா தின விழா
1 min readYoga Day Festival at Ravanasamudram Bharatiyar Community College
23.6.2023
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள
இரவணசமுத்திரம் சேவாலயாவில் மகாகவி பாரதியார் சமுதாய கல்லூரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு அம்பாசமுத்திரத்தைச் சார்ந்த இயற்கை யோகா மைய ஆசிரியர் தேங்காய்மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள் விழாவிற்கு வந்தவர்களை சமுதாய கல்லூரி தையல் பயிற்சி ஆசிரியை ஜெயசுதா வரவேற்று பேசினார்.
கல்லூரி மருத்துவ செவிலியர் சகாய பிரியா யோகா மற்றும் இயற்கை உணவே நோயற்ற வாழ்வை தரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சிறப்பு விருந்தினர் எனது உரையில் யோகாவை பற்றியும் இயற்கை உணவை பற்றியும் அதன் நன்மைகளையும் சமுதாய கல்லூரி மாணவியருக்கு எடுத்துரைத்தார். தனது பயிற்சி செய்யும் யோகா கலையையும் சமுதாய கல்லூரி மாணவிகளுக்கு வாரம் தோறும் இலவசமாக பயிற்றுவிக்க தயாராக உள்ளதாக கூறினார் .கல்லூரி சமுதாய கல்லூரி மாணவர்கள் யோகா கலையை பற்றியும் இயற்கை உணவையும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டார்கள் .
பாரதியார் சமுதாய கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தான் சிறப்பு விருதுகள் நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார். சிறப்பு விருந்தினரின் மனைவி முத்துலட்சுமி சமுதாய கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை உணவு ஊக்குவித்தல் சம்பந்தமாக பேரிச்சம்பழம் மற்றும் வாழைப்பழ இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.