May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பாப்பாக்குடி தலைமை காவலருக்கு டிஜிபி பாராட்டு

1 min read

DGP Appreciates Papakudi Head Constable

26.6.2023

தென்காசி காவல் நிலைய தனி பிரிவு காவலராக பணியாற்றி தற்போது பாப்பாக்குடி தலைமை காவலராக பணியாற்றி வரும் முத்துராஜுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

காவல்துறை பணியில் மிக சிறப்பாக பணியாற்றிய பாப்பாக்குடி தலைமை காவலர் முத்துராஜ்க்கு பாராட்டு சான்றிதழை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார்.தென்காசி மாவட்டம், தென்காசி காவல்நிலையத்தில் தனி பிரிவு காவலராக பணிபுரியும் காலங்களில் பல. விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றவர்.

கண்டுபிடிக்க முடியாத கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை கண்டுபிடித்து காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர் தனி பிரிவு காவலராக இருந்து கொண்டு சட்டம் ஒழுங்கு காவலர் செய்கின்ற வேலையையும் சேர்த்து பார்த்து வந்தார் உயர் அதிகாரிகளின் குட்புக்கி ல் இடம் பெற்றவர் சிறந்த நுண்ணறிவுடன் செயல்பட்டவர் என அதிகாரிகள் எழுதி வைத்துள்ளனர். அதை இன்றுவரை திறம்பட கையாளுகிறார்.

தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்த காலங்களில் ஜாதி மத ரீதியான மோதல்க ள் குறித்த முதல் தகவலால் உடனடியாக நடவடிக்கை எடுக்கபட்டு தீர்வு காணபட்டது. தென்காசி மாவட்டம் மேக்கரை மலை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தவர்களை தமது தனிபட்ட சோர்ஸ் மூலமாக கண்டறிந்து அவர்களை கைது செய்து ஊறல்களை அழிக்க உதவியவர்.

தற்போது திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல்நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். தனிபிரிவில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட எஸ்பிக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் தற்போது ஏனோ தனி பிரிவில் இல்லாமல் போனது தென்காசி மக்களுக்கும் தென்காசி மாவட்ட போலீசாருக்கும் பெரும இழப்பாகவே கருதப்படுகிறது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உடன் பாராட்டு சான்றிதழ் பெற்ற தலைமை காவலர் முத்துராஜுக்கு தென்காசி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.