ஆற்காடு அருகே விபத்தில் தப்பதி பலி
1 min readEscaped killed in an accident near Arcot
26.6.2023
ஆற்காடு அருகே திருமண நாளை முன்னிட்டு பைக்கில் சாமி கும்பிட கோயிலுக்கு சென்ற போது எதிரே வந்த தனியர் பஸ்மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையேற்படுத்தியுள்ளது
விபத்து
இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த ஈஸ்வரன் (35) என்பவர் காஞ்சிபுரம் அடுத்த ஒரகடத்தில் உள்ள நிசான் கார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்த நிலையில் 3 மற்றும் ஒரு வயதில் கிஷார்குமார் , தஷ்வந்த் என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர் .
இந்நிலையில் தம்பதியனருக்கு இன்று திருமண நாளையொட்டி ஆற்காடு அருகே உள்ள பச்சையம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஈஸ்வரன் , மனைவி சங்கீதா, குழந்தை தஷ்வந்தை பைக்கில் அழைத்துக்கொண்டு ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது .
அப்போது வழியில் தென்கடப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே ஆற்காட்டிலிருந்து செய்யாறு நோக்கி வேகமாக சென்ற தனியார் பஸ் டிரைவரின் கட்டுபாட்டையிழந்து எதிரே வந்த ஈஸ்வரனின் பைக் மீது மோதியது.
சாவு
அதில் ஈஸ்வரன்,சங்கீதா தம்பதியினர் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர் . குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பினான் . விபத்து குறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுக்காப் போலீஸார் உடனே சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க முயற்சித்தனர்.
அப்போது அங்கிருந்த ஈஸ்வரனின் உறவினர்கள் ஆத்திரத்தில் அதனைத்தடுத்து விபத்துக்கு காரணமான பஸ்டிரைவர், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர் .அதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது அதனையறிந்த ஏடிஎஸ்பி விஸ்வேசரய்யா,டிஎஸ்பி பிரபு அங்கு விரைந்து உறவினர்களை சமாதானப் படுத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர் இதனையடுத்து போலீஸார் சடலங்களைமீட்டு பிரதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் .
இதற்கிடையே திருமண நாளன்று தம்பதியினர் சாமிதரசனம் செய்ய கோயிலுக்கு சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்து இருவரும் சடலமாகக் கிடந்திருப்பதைக் கண்டு உறவினர்கள் கதறியழுதக் காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது .