May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே வக்கீல் உட்பட 2 பேர் வெட்டிக் கொலை

1 min read

2 people, including a lawyer, were hacked to death near Alankulam

30.6.2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக வக்கீலர் உட்பட 2 பேரை வெட்டி கொலை செய்த இராணுவ வீரர் உள்ளிட்ட நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

வக்கீல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சார்ந்தவர் சின்னத்துரை (வயது 60) இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.இவருக்கு அசோக் குமார் வக்கீல்
(வயது 23) என்ற மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. வழக்கறிஞரான அசோக் குமார் தென்காசி நீதிமன்ற த்தில் வழக்கறிஞராக செயல்பட்டு வந்துள்ளார்.

வக்கீல் அசோக்குமாரின் தந்தை
சின்னத்துரை குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் குழந்தைப் பாண்டியன் குடும்பத்தினரு க்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சின்னத்துரை தனது வீட்டு சுவருக்கு வெள்ளை அடிக்க முயன்ற போது இரு குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தை பாண்டியனின் மகனும் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருபவருமான சுரேஷ் (வயது 27) என்பவர் விடுமுறையில் கடந்த வாரம் ஊருக்கு வந்தபோது இரு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சின்னத்துரை தரப்பினர் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி தென்காசி எஸ்பி சாம்சனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த இராணுவ வீரர் சுரேஷ் தரப்பினர் சின்னதுரையின் அண்ணன் துரைராஜ் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பிற்கு நேற்று காலை தீ வைத்ததாகவும், மேலும் அவரது தோட்டத்திற்கு சென்று அங்கு பயிரிட்டிருந்த சோளப் பயிர்களை வெட்டி சாய்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட சின்னதுரை தரப்பினர் இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அசோக்குமார் தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த இராணுவ வீரர் சுரேஷ் மற்றும் சிலர் அசோக்குமாரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் வழக்கறிஞர் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக சாய்ந்தார்.
இதை தடுக்க முயன்ற அவரது சகோதரி அருள்ஜோதி என்பவரின் விரல்கள் துண்டிக்கப்பட்டன.

இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த அசோக்குமாரின் பெரியப்பா துரைராஜ் (வயது 60) என்பவரையும் அந்த கும்பல் வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த துரைராஜை சிகிச்சைக்காக நெட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அங்கு அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரை திறப்பினர் ராணுவ வீரர் சுரேஷின் வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது

தகவலறிந்த தென்காசி எஸ் பி சாம்சன், இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் கொலை பட்ட வழக்கறிஞர் அசோக்குமார் மற்றும் துரைராஜ் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சலை மறியல்

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர் அசோக்குமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலங்குளம் – ரெட்டியார்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தப்பி ஓடிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை விட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது. மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.