May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி-மாவட்ட ஆட்சியர் தகவல்

1 min read

Soon Government Medical College-District Collector Information in Tenkasi

30.7.2023
தென்காசி மாவட்டம், மேலகரம் அரசுப்பொது நூலகம் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவை இணைந்து தென்காசி வட்டார பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவில் தென்காசி மாவட்டத்தில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவ அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்

மேலகரம் அரசுப்பொது நூலகம் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவை இணைந்து தென்காசி வட்டார பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவிற்கு குறிஞ்சி வாசகர் பேரவை தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் காசிவிஸ்வ நாதன் முன்னிலை வகித்தார். குறிஞ்சி வாசகர் பேரவை செயலர் ப.சங்கர நாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அப்போது தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் நீண்ட கால கனவான அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்

இவ்விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது தென்காசி மாவட்டத்தில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து நாற்பது மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பரிசு பெற்றனர்.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோற்கள் மற்றும்ஸகுறிஞ்சி வாசகர் பேரவையினர் திரளாக
கலந்து கொண்டனர்.
தென்காசி நூலகர் ஜெ.சுந்தர் வாழ்த்துரை
வழங்கினார்.
நன்நூலகர் செங்கோட்டை கோ.இராமசாமி விழா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
மேலகரம் பொறுப்பு நூலகர் ரவிச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.