May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

கணக்கபிள்ளைவலசையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 min read

Road safety awareness program at Kanpapillawalasai

30.9.2023
செங்கோட்டை அருகே நெடுஞ்சாலைதுறை சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை உட்கோட்ட நெடுஞ்சாலைதுறை சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கணக்கப்பிள்ளை வலசையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு செங்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். இளநிலைப் பொறியாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் தென்காசி போக்குவரத்து சிறப்பு காவல் ஆய்வாளர் மணி, ஜே.பி.பொறியியல் கல்லூரி துறை தலைவர் பழனி, ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதே போல ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ஆலோசனை கூறி இலவசமாக ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சாலை பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.