பணியாளர்கள் நலனில் அக்கறை காட்டும் நாடுகளில் இந்தியா 2-வது இடம்
1 min read
India ranks 2nd among countries concerned about employee welfare
3.11.2023
மெக்கென்சி சுகாதார நிறுவனம் உலகளாவிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த நிறுவனம் உடலளவில், மனதளவில், சமூக அளவில், அமைதி அளவில் பணியாளர்களின் நலன் குறித்து ஆய்வு நடத்தியது.
இதில் தொழில் உற்பத்தியில் நம்பர் ஒன் நாடாக விளங்கும் ஜப்பான், கடைசி இடத்தை பிடித்துள்ளது. 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பணியாளர்களிடம் நடத்திய ஆய்வில் 25 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.
துருக்கி 78 சதவீத மதிப்பெண்ணுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 76 சதவீத மதிப்பெண்ணுடன் 2-வது இடத்தையும், சீனா 75 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
ஜப்பானில் ஆயுட்காலம் முழுவதும் வேலை, வேலைப் பாதுகாப்பு போன்ற வசதிகள் வழங்க தயாராக இருந்து போதிலும், அவர்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்க விருப்பம் இல்லாமல், மாற்று நிறுவனத்தை தேட வேண்டுமென்றால் மிகவும் கடினமாக இருப்பதாக பணியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த விசயத்தில் உலகளாவிய ஆய்வில் ஜப்பான் தொடர்ந்து பின்தங்கிய நிலையில்தான் இருந்து வருகிறது. இதன் பிரதிபலிப்புதான் இந்த ஆய்வு முடிவு.