May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது

1 min read

2 people were arrested for selling tobacco near Pavoorchatram

27/11/2023
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மேலப்பட்ட முடையார்புரம் நாடார் நடுத்தெருவை சேர்ந்த நயினார் என்பவர் மகன் சிவக்குமார் என்ற பொன்பாண்டி (வயது 51), தேவர் நடுத்தெருவை சேர்ந்த தங்கராசு(36) ஆகியாரின் கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.