கீழப்பாவூர் பேரூராட்சி புதிய நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா
1 min readFoundation stone laying ceremony of new entrance gate of Geezpavur municipality
17.12.2023
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி விலக்கில் புதிய நுழைவு வாயில் பணி மற்றும் தூய்மைப்பணிக்கு 12 பேட்டரி வாகனங்களை ஞர்னதிரவியம் எம்.பி.தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட கீழப்பாவூர் விலக்கு பகுதியில் புதிய நுழைவு வாயில் பணி அடிக்கல் நாட்டு விழா மற்றும் பேரூராட்சி தூய்மைப்பணி பயன்பாட்டிற்கு 12 பேட்டரி வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் ;விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் கலந்து கொண்டு, கீழப்பாவூர் விலக்கு பகுதியில் புதிய நுழைவு வாயில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியும், தூய்மைப்பணி பயன்பாட்டிற்கு பேட்டரி வாகனங்களை அர்ப்பணித்தும் பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் வாழ்த்தி பேசினார்.
கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் ஜா.மாணிக்கராஜ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கி.ராஜசேகர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வி.ராதா விநாயகப்பெருமாள், செ.கோடிஸ்வரன், மு.மாலதி முருகேசன், கு.ஜெயசித்ரா குத்தாலிங்கம், மு.கனகபொன்சேகா முருகன், க.இசக்கிராஜ், சி.அன்பழகு சின்னராஜா, ஜா.ஜேஸ்மின் யோவான், ரா.விஜி ராஜன், மா.இசக்கிமுத்து, சு.பவானிஇலக்குமண தங்கம், தா.தேவஅன்பு, ஜெ.முத்துசெல்வி ஜெகதீசன், த.வெண்ணிலா தங்கச்சாமி, ம.சாமுவேல்துரைராஜ், சீ.பொன்செல்வன் மற்றும் பொதுமக்கள், பேரூராட்சி பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.