கீழப்பாவூர் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் தொடங்கியது
1 min readIn Geezpavur Temples The special pujas of Margazhi month have started
17.12.2023
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோயில் மற்றும் கிருஷ்ணன் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் (ஞாயிறு) தொடங்கியது.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில் இக்கோவிலில் மார்கழி; மாத சிறப்பு பூஜைகள் இன்று(ஞாயிறு) காலை தொடங்கியது. தொடர்ந்து 2024 ஜனவரி 14 ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 6 மணிக்கு ஸ்ரீராமநாம பஜனையுடன் திருக்கோயில் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளம்) ஏராளமான பக்தர்கள் வலம் வந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதே போல்கீழப்பாவூர் தமிழர் தெருவில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலும் மார்கழி மஹோத்ஸவ விழா இன்று காலை தொடங்கியது. 2024 ஜனவரி 15ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
இன்று காலை 5 மணி முதல் 6 மணி வரை சுப்ரபாதம், கும்பஜெபம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியம், தயிர், பால், தேன், இளநீர் பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் ஆகியன நடைபெற்றன. மாலை 6 மணிக்கு சாயரக்சை, 6.30 மணிக்கு ஸ்ரீPமத் பாகவத மூல பாராயணம், இரவு 7 மணிக்கு சகஸ்ர நாம பாராயணம், ஆத்ம நிவேதனம், 8 மணிக்கு சுவாமி புறப்பாடு ஆகியன நடைபெறுகிறது.