April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கோவிந்தப்பேரியில் பல்நோக்கு சுகாதார கட்டிடம்-அடிக்கல் நாட்டு விழா

1 min read

Multi-Purpose Health Building at Govindapperi-Foundation Ceremony

17.12.2023

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் ரூபாய் 9.90 லட்சம் செலவில் பல்நோக்கு சுகாதார கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.இசேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செல்லம்மாள் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

திருநெல்வேலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா. ஞான திரவியம் தனது பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூபாய் 9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டிட தனது நிதியில் நிதி ஒதுக்கி இன்றுஅடிக்கல் நாட்டினார்.
.
இந்த நிகழ்ச்சியில் கோவிந்தப்பேரி துரைபாண்டியன், சங்கர், ஒய்வு பெற்ற ஆசிரியர் பூலோகபாண்டியன்,மாணிக்கம்,கருத்தப்பாண்டி, ஊர் நாட்டமை இராமசாமி, ஊராட்சி செயலர் பா.மூக்காண்டி, மக்கள் நல பணியாளர் கிருஷ்ணன்,செந்தில்குமார்,மாரித்துரை, ஊராட்சி பணியாளர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.