பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர் களுக்கு வெய்க்காலிபட்டியில் வரவேற்பு
1 min readWelcome to Bharathidasan University students at Veikalipatti College
10.1.2024
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையம் சார்பில் முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா வெய்க்காலிப்பட்டி கல்லூரியில் நடைபெற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொலை தூர கல்வி நிறுவன தென்காசி கல்வி மையம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. . இவ்விழாவிற்கு கல்வி குழும செயலர் டாக்டர் சகாய ஜான் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் குளோரி தேவஞானம் முன்னிலை வகித்தார். தென்காசி மைய ஒருங்கிணைப்பாளரும், தென்காசி ரெடி கல்வி மைய இயக்குனருமான டாக்டர் வில்சன் அருள் ஆனந்த் வரவேற்றார்.
பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு தலைவரும், சென்ட்ரல் அரிமா சங்க தலைவருமான கே.ஆர்.பி.இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.விளையாட்டுத்
துறை இயக்குனர்கள் சிவராஜா, தூய அலெக்ஸ், நூலகர் ஸ்டீபன் பாக்கியராஜ் ஆகியோர் மாணவர்கள் தேர்வு எழுதுவது குறித்து விளக்கினர்.ஏற்பாடுகளை பாத்திமா, இமாம் ஆகியோர் செய்திருந்தனர்.