May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

மன்சூர் அலிகான் புதிய கட்சி தொடங்கினார்

1 min read

Mansoor Ali Khan started a new party

26.2.2024
பிரபல வில்லன் நடிகரான மன்சூர்அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.

கட்சியின் முதல் மாநாடு பல்லாவரத்தில் நடந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

  • வாக்கு இயந்திரங்களை ஒழித்து வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
  • மது, கஞ்சா, போதைப் பொருள் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மன்சூர்அலிகான் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டி யிடுவது பற்றி சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். மின்னணு எந்திர வாக்குப்பதிவு மூலம் 2 முறை மாப்பிள்ளை ஆகிவிட்டார் பிரதமர் மோடி. 3-வது முறையும் மின்னணு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தி மாப்பிள்ளை ஆக பார்க்கிறார்.

எந்திர வாக்குப்பதிவில் மோசடி நடைபெறுகிறது. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். இந்தியாவிலும், நைஜிரியாவிலும் தான் எந்திர வாக்குப்பதிவு உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை.

இந்தியாவை தமிழன்தான் ஆள வேண்டும். தமிழகத்தில் நெசவு தொழிலாளர்கள் பலர் ஒரு கிட்னியுடன் வாழ்ந்து வருகிறார்கள். வாழ்வாதாரத்திற்காக ஒரு கிட்னியை விற்று விட்டனர். அவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் தனியாக அறக்கட்டளை தொடங்கி வட்டியில்லாத கடன் வழங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.