April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.1.5 கோடி நகை துணிகர கொள்ளை

1 min read

Rs 1.5 crore jewelery robbery at gunpoint

15.4.2024
சென்னை ஆவடியில் உள்ள ஒரு ஜூவல்லரி நகைக்கடையில் 4 நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பியோடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, ஆவடியை அடுத்த முத்தாப்புதுப்பேட்டை எல்லையம்மன் நகர் ஐஏஎப் சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று பிற்பகலில் கடையில் பிரகாஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சுமார் 4 பேர் கடைக்குள் புகுந்து, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும், பிரகாஷின் கை, கால்களையும் கட்டிப்போட்டனர்.பின்னர் கடையில் இருந்த சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக பிரகாஷ் போலீசில் புகாரளித்தார். துப்பாக்கி காட்டி நகைகளை கொள்ளையடித்து சென்ற 4 பேரின் சிசிடிவி காட்சி படங்களை வெளியிட்ட போலீசார், கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.