April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

1 min read

Study meeting on election security in Tenkasi

16.4.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர், காவல்துறை பார்வையாளர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை தாங்கினார். தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, காவல் துறை பார்வையாளர் பங்கஜ் நைன், தேர்தல் செலவின பார்வையாளர் சதீஷ் குருமூர்த்தி மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி களிலும் காவல்துறை அலுவலர்கள் மேற்கொள்ளும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.