May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

தேர்தலையொட்டி தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு

1 min read

19,000 paramilitary soldiers gathered in Tamil Nadu on the occasion of the election

18.4.2024
நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன், வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பிவைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் நாளை 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். சென்னையில் 2 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் மையங்களிலும் 1,500 துணை ராணுவப் படையினர் ஈடுபட உள்ளனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்காகவும், அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.