தென்காசியில் திமுக நிர்வாகி வீட்டில் பறக்கும்படையினர் திடீர் சோதனை
1 min readAir Force raids DMK executive’s house in Tenkasi
20.4.2024
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூர் பகுதியில் உள்ள தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சு.பாலாமணி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் போலீசார் உடன் வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சு. பாலாமணி நேற்று திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு ஆதரவாக பணி
யாற்றி வந்த நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சியைச் சார்ந்த ஒருவர் பாலாமணி வீட்டில் கட்டு கட்டாக பணம் இருப்பதாகவும் அது திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் விநியோகிக்க வைத்திருப்பதாகவும் உடனடியாக சோதனை நடத்த வேண்டும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சை நம்பி கிழப்புலியூர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர்பாலாமணியின் இல்லத்திற்கு போலீசார் உடன் வந்த பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத் தினர். அந்தச் சோதனையில் அவரது வீட்டில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றனர்.
அதன் பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் பாலாமணியின் வீட்டிற்கு வந்த பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பாலாமணிக்கு சொந்தமான 4 சக்கர வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போதும் பணம் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் வெறும் கையோடு திரும்பி சென்றனர்.
இருமுறை சோதனை நடைபெற்றதோடு மேலும் அந்தப் பகுதியில் உள்ள சில திமுக நிர்வாகிகளின் வீடுகளுக்கும் சென்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம் எதுவும் சிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதை அறிந்த திமுக நிர்வாகிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது