May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆழ்வார்குறிச்சி முன்னாள் மாணவர்கள் சங்க செயற்குழு கூட்டம்

1 min read

Alwarkurichi Alumni Association Executive Committee Meeting

23.4.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் எஸ்வி.பெருமாள் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற இந்தியரிசர்வ் வங்கி பொதுமேலாளர் எஸ்.ஹரிகிருஷ்ணன்,துணைபொதுசெயலாளர் எஸ்.கண்ணன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.மீனாட்சிசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

பொருளாளர் கே.சிவசங்கர் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.கடந்த சிலதினங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நிதி வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தும், ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க
கல்லூரி முன்னாள் மாணவர்கள் வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தி.சுப்பையா, தூர்தர்ஷனில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆ.நவநீத பெருமாள் உள்ளிட்டோர் கெüரவிக்கப் பட்டனர்.

இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் பொதுச்செயலர் எம்.முகைதீன் பிச்சை தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் சங்கரலிங்கம், மதார்,வழக்குரைஞர் சக்திவேல், கோமதி மகாலெட்சுமி, எஸ்.சக்தி, பா.பிரகாஷ், முன்னாள் மாணவர்கள் ஐ.முகம்மதுஅலி, பூ.சு.கணேசன்,டிஎம்.சௌந்தரராஜன்,சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் அருமைராஜ், அலுவலக செயலர் சதீஷ்நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். துணைப் Technology எஸ்.முருகேசன் அனைவரையும் வரவேற்றுஷபேசினார். முடிவில் எம்.பாலசுப்பிர மணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.