நாயை குளிப்பாட்டிய அக்காள்-தம்பி ஏரியில் மூழ்கி பலி
1 min readSister-brother drowned in the lake after bathing the dog
24.4.2024
வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தங்களது வளர்ப்பு நாய்யை குளிப்பாட்ட சென்றபோது இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன், மாலதி தம்பதியினர். இவர்களுக்கு ஜோதிலிங்கம் (10), ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று பிள்ளைகள். இவர்கள் கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் ஜோதிலிங்கம் ஐந்தாம் வகுப்பு, ஜோதிகா இரண்டாம் வகுப்பு, ஜோதிஷ் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாய் மாற்றும் தந்தை வேலைக்கு சென்று இருந்ததாலும்,பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் மீட்க போராடினர்.இருப்பினும் இருவரையும் சடலமாக மீட்கப்பட்டனர்.
தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.