சங்கரன்கோவில் ஓடையில் கார் கவிழ்ந்து கணவன் மனைவி பலி
1 min readA husband and wife died in an accident in which a car fell into a river in Sankarankovil
தென்காசி ஏப். – 30
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஓடையில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் மாதவ ராஜா மகன் வெங்கடேஷ் ( வயது54 ) அரசு ஒப்பந்ததாரர்.இவரது மனைவி சுமிதா (வயது 47). வெங்கடேஷ் ,சுமிதா தம்பதியரின் மகளை ராஜபாளையத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
.இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்களது மகளை பார்ப்பதற்கு கணவன் மனைவி இருவரும் ராஜபாளையம் வந்துள்ளனர். இந்நிலையில் மகளை சந்தித்து விட்டு மீண்டும் ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு தங்களுடைய காரில் சென்றுள்ளனர்.காரை வெங்கடேஷ் ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சங்கரன்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் விலக்கு அருகில் இரவு 8 மணி அளவில் கானாங்கரை ஓடையில் கார் திடீரென தடுமாறி உள்ளே விழுந்து உள்ளது .அதில் 5 அடிக்கு தண்ணீர் இருந்துள்ளது. இந்நிலையில் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் வந்தவர்கள் இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் கடும் போராட்டத்திற்கு பிறகு காரை மீட்டனர் .அதிலிருந்து வெங்கடேஷ், சுமிதாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஓடைக்குள் கார் விழுந்து கணவன் மனைவி பலியான சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Attachments • Scanned by Gmail